Pages

Showing posts with label ஆதார். Show all posts
Showing posts with label ஆதார். Show all posts

Monday, October 17, 2011

ஆதார் கட்டுரை (கழுகு)


                           ஆதார் 
 
ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண்,அது இந்திய அரசால் இந்தியர்களுக்கு வழங்கப்படும்.

இந்த எண் உங்களுடைய மற்றும் உங்களின் முகவரிக்கான அடையாளமாக இந்தியா முளுவதும் செல்லக்கூடியது.

ஆதார் பெயர்க்காரணம்:

 அது என்ன ஆதார் ? அதாவது இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்ட தட்ட ஒரே அர்தத்துடனும், உச்சரிக்கவும் எளியதாக உள்ளதால் உருவானது தான் இந்த ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் என்று அர்த்தம். 
    
ஆதாரில் அடங்கியுள்ளவை:

 இதில்  16kb மெமரி சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அதில் உங்களது ரத்த வகை, விழி அமைப்பு,இடது கை மற்றும் வலுது கை விரல்களின் ரேகை, முகவரி, போன்ற உங்களின் அனைத்து அடிப்படை தகவல்களும் சேமித்து வைக்கப்படும்.( ஆதார் பெயர்க்காரணம் இப்பொழுது புரியும் என நம்புகிறேன்)

தனித்துவம்:

 இந்த 12 இலக்க எண் உங்களுக்கே உரித்தானது. ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால் வாழ்நாள் முளுவதும் அது உங்களுடையதே வேறு எவருக்கும் இந்த எண் வழங்கபட மாட்டா.

இது ஒரு ரேண்டம் எண், இந்த எண் நீங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தரப்படும் .

எதற்க்கெல்லாம் பயன்படுத்தலாம்:

இந்த ஆதாரை பயன்படுத்தி வங்கியில் கணக்கு துவங்கலாம், புதிய தொலைப்பேசி இணைப்பு பெறலாம். அரசு மற்றும் அரசு சாரா அனைத்து சேவைகளைப் பெறுவதர்க்காகவும் இதை அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.

எப்படி வாங்குவது:

கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் முகாம் உள்ளது எனவே தத்தம் மாவட்ட முகாம்களுக்கு கீழ்க்கண்ட ஆவணங்களை எடுத்துச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

 1.புகைப்பட அடையாள சான்று ( பான் கார்டு,வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
2.முகவரிக்கான சான்று (மிண் கட்டண ரசீது ,தொலைபேசி ரசீது, குடும்ப அட்டை,வீட்டு வரி ரசீது போன்றவை )

நமது வங்கி கணக்கு தொடர்பான அடிப்படை விடயங்களும் தரவேண்டும்(அவரவர் விருப்பத்தை பொருத்து).  
 
அங்கு சென்றவுடன் உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கபட்டு பதியப்படும். பின்பு உங்களின் விழி அமைப்பு, கைரேகை, புகைப்படம் போன்றவை பதியப்படும் அவ்வளவுதான். உங்களுக்கான தற்காலிக எண் வழங்கபடும்(ஒரு அத்தாட்சி சான்று).

தற்காலிக எண் :

அதாவது நீங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 60 -90 நாட்களுக்குள் ஆதார் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

இல்லையெனில் இந்த தற்காலிக என்னை வைத்து உங்களின் ஆதார் விவரங்களை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த எண் 28 இலக்கங்களை கொண்டது . முதல் 14 இலக்கம் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் நீங்கள் பதிந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பதாகும்.
     
வயது வரம்பு உண்டா:

இந்த திட்டதிற்கு வயது வரம்பே கிடயாது . பிறந்த குழந்தை முதல் மூத்த குடி வரை அனைவரும் பெறலாம் .

இன்னாப்பா காமெடி பண்ற ? பொறந்த குழந்தைக்கு எதுயா டிரைவிங் லைசென்ஸ் ?

பொறுங்கள் குடும்பதில் ஒருவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தால் போதும் அனைவரும் அதை வைத்து பதியலாம்.
 (கைரேகை,விழியமைப்பு,புகைப்படம் போன்றவை போலிகளை அண்டவிடாது என்பதால் தான் இந்த வசதி)

குழந்தைகளுக்கு கைரேகை வளர சில ஆண்டுகள் ஆகுமே?

 அதற்க்குதான் விழித்திரையும் பதியப்படுகிறது.

செலவு :

இந்த திட்டதிற்கு முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது எனவே இது ஒரு இலவச திட்டம்.

ஆதார் சந்தேகங்களுக்கு :

அழையுங்கள் = 1800-180-1947
ஃபேக்ஸ் = 080-2353 1947
கடிதங்களுக்கு = தபால் பெட்டி எண் 1947, GPO பெங்களூர்-560001
மின்னஞ்சல் = help@uidai.gov.in

நிறுவனங்கள்:

     ஆதார் எண் வழங்கும் பணியில் இன்போஸிஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான நத்தன்நீலேகனி தலமையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,பாங்க் ஆஃப் பரோடா,இந்தியன் பாங்க்,இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,டீம் லைஃப் கேர் இண்டியா பிரைவேட் லிமிடட்,ஸ்ரீஷிகாஜ் போன்ற நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை கார்வி என்ற நிறுவனம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. நம்முடைய விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறப்படுகின்றன. 

ஆதார் பற்றிய பொதுவான சந்தேகங்களும் அதற்கான பதில்களும்:

*ஆதார் என்பது குடும்ப அட்டையை போல்,வாக்காளர் அடையாள அட்டையை போல் மற்றுமொரு அட்டையா? .

  - கிடையவே கிடையாது ஆதார் என்பது 12 இலக்க எண்.மற்றவற்றில் எளிதாக போலி என்று ஒன்று உருவாக்கலாம் இதில் முடியாது.

* குடும்பத்திற்கு ஒன்று இருந்தால் போதுமா?

  - இது ஒவ்வொரு தனி மனிதருக்கும் வாங்க வேண்டும்.

*இது இந்திய குடிமகன்/மகள் என்பதற்கா சான்றா?

   -  கிடையவே கிடையாது இது உங்களுக்கான அடியாளம். 
பிறநாட்டவரும் பெறலாம்(நிபந்தனைகளுக்கு உட்பட்டு )

* கண்டிப்பாக வாங்கவேண்டுமா?.

   - இல்லை, விருப்பபடுபவர்களுக்கு மட்டும்.

*ஒருவர் பல ஆதார் வாங்கலாமா?

   - ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே .

*எனக்கு ஃபேன்சி நம்பர் வேணும்

   - இது செல்போன் இணைப்பு எண் கிடயாது.

*பாஸ்போர்ட்,குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

    - அவற்றை வாங்க வேண்டுமானால் பயன்படுத்தலாம். மாற்றாக பயன்படுத்த இயலாது.   
             
சர்ச்சைகள்:

1.இந்த திட்டதிற்கான செலவு 3ஆயிரம் கோடி என்றார்கள் ! ஆனால் உண்மை என்னவென்றால் இது வெறும் 10 கோடி பேருக்கு மட்டுமே!  இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த 15 ஆயிரம் கோடி தேவைப்படும் 2017-ல் தான் முடியும்( ஒரு வேல அடுத்த 2g யோ?)

2.நம்முடைய அனைத்து தகவல்களும் அரசாங்க டேட்டா பேஸில் பதிவு செய்யபட்டுள்ளதால் நம்மை பாதுகாப்பு என்ற பேரில் கண்காணிக்க வாய்ப்பு உண்டு!

3.இந்த திட்டத்தின் மூலம் போலிகளை மூளுமையாக ஒழிக்க முடியாது என மான்டெக் சிங் அலுவாலியா கருத்து தெரிவிதுள்ளாரே.

4.இந்தற்கான மென்பொருள் வெளிநாட்டில் இருந்து வாங்கபட்டுள்ளதாகவும் நம்முடைய தகவல்களை அவர்கள் எளிதில் பயன்படுத்தலாம் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.  

பயோ –சிப்:

*இதையும் தாண்டி .பயோ –சிப் (rfid) அதாவது Radio Frequency Identification இந்த முறை மூலம் ஆதார் அட்டை தொலைந்து போனாலும்,சிப் உடலினுள் பொருத்தபடுவதால் நமக்கு பிரச்சனை இல்லை.அனைத்து நாடுகளிலும் பரவலாக அறியப்பட்ட இந்த முறை இந்தியாவில் நுழைய வெகு காலம் பிடிக்காது..( கூடுதல் தகவல் தந்த மணிகண்டன் மற்றும் செந்தில் குமாருக்கு நன்றி)     
                                           

Sunday, October 16, 2011

ஆதாரின் வரலாறு


ஆதாரின் வரலாறு :

     ஆதாரின் அடிப்படை கருத்து 2006 ல் உருவானது. “வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக” என்ற மேற்க்கோளுடன் மார்ச் 03, 2006 ல் இந்த திட்டம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவிக்கபட்டது .

    இந்த திட்டம் தேசிய தகவல் கழகத்தால் ஓராண்டு பல்வேறு கட்ட பரிசீலனைக்கு உட்பட்டது. அதே நேரம் 2006 ஜூலை யில் ஆதாரை செம்மை படுத்துவதற்காக மேலும் ஒரு கமிட்டி நிர்ணயிக்கபட்டது.

   திட்டக்குழுவின் வழிநடத்துனர் டாக்டர்.அரவிந்த் விர்மானி என்பவரால் ஆதார் வழிநடத்தபட்டது. ஆதாரின் அடிப்படை கொள்கைகள் 2007ல் விப்ரோ நிறுவனத்தால் கமிட்டியிடம் சமர்பிக்கபட்டது.

    இந்த கமிட்டி கிட்டதட்ட 7 முறை கூடியது .அமைச்சர்கள் கொண்ட கமிட்டி 4 முறைக்கு மேல் கூடியது.

பிரதம மந்திரி குழு :

    ஜூலை 30 , 2009ல் பிரதம மந்திரி குழு அமைக்கபட்டது. இதன் தலைவராக நத்தன் நீலகேனி பதவியேற்றுக்கொண்டார்( இன்போஸிஸ் நிறுவனத்தை தோற்றுருவித்தவர்களில் ஒருவர் ).இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    முதல் முறை 2009 ஆகஸ்ட் ல் கூடியது.அதன் பிறகு ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறையும் இந்த குழு கூடி பேச்சுவார்த்தை நடத்தும்.

  கமிட்டி:

     UIDAI தலைமையகம் டெல்லியில் உள்ளது . இது 2009ல் ஆதாருக்காகவே உருவாக்கப்பட்டு திட்டக்குழுவுடன் இணைக்கப்பட்டது . தலைவராக நத்தன் நீலகேனி உள்ளார், இயக்குனராக ஆர்‌எஸ்.ஷர்மா உள்ளார். 

     மேலும் 21 துணை இயக்குனர்கள்,15 இணை இயக்குனர்கள்,15 செக்சன் ஆபிசர்கள்,15 உதவியாளர்கள்,நிதி,தொழில்நுட்பம் என   ஒட்டுமொத்தமாக 146 பேர் உள்ளனர்.                  
  
           

Saturday, October 15, 2011

ஆதார் சின்னம்


   ஆதார் சின்னம் உருவுவான விதம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

   ஆதார் பெயரும் சின்னமும் UIDAI ஆல் உருவாக்கபட்டது. ஆதாருக்காக உருவாக்கபட்ட சின்னமானது, சூரியன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும் அதில் கைரேகை உள்ளவாரும் வடிவமைக்கபட்டுள்ளது.கிட்டதட்ட ஆதாரின் குறிக்கோள்களை வெளிப்படுத்துவாதல் ஏற்றுக்கொள்ளபட்டது.

 போட்டி:

    பிப் 2010-ல் ஆதார் சின்னதிற்கான இந்திய அளவிலான போட்டி பற்றிய அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான ஒரு சில வாரங்களில் 2000க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் இந்தியா முளுவதிலிருந்தும் வந்து குவிந்தன. 
             
   ஆதாரின் நோக்கங்களையும்,குறிக்கோள்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.
பெறப்பட்ட சின்னங்கள் விழிப்புணர்வு மற்றும் தகவல் குழுமத்தால் தேர்ந்தெடுக்கபட்டது. 

   மிகவும் கடுமையான மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு 5 பேர் இறுதி கட்ட பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மிச்செயல் ஃபோளி
சஃப்ரன் பிராண்ட் கண்சல்டண்ட்ஸ்
சுதிர் ஜான் ஹோரோ
ஜெயந்த் ஜெய்ன் அண்ட் மஹேந்திர குமார்
அடுள் s பாண்டே

   இறுதியில் புனேவைசேர்ந்த   அடுள் s பாண்டே என்பவர் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கபட்டார். வெற்றி பெற்றவருக்கு  ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கபட்டது. மீதமுள்ள 4 பேருக்கும் தலா பத்து ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.


   இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், ஆதாருக்கு பங்களித்கதில் நான் பெருமைப்படுகிறேன் என அடுள் s பாண்டே கூறினார் .   நன்றி http://uidai.gov.in/
      

ஆதார் மாதிரி படிவம்


Aadhaar Form

AADHAAR/Enrollment number: _______________
Date :_____ /______ /___________
Part A – Primary Details
Name: ___________
Mother / Father / Husband / Guardian’s Name _________________
(Name of Mother/Father/Guardian is must for children below 5 years of age)
Date of Birth: ___________
If not known, Age:______
Gender:   Male, Female, Transgender
Residential address:
c/o:_______________________________
House No. and name: ___________________
Street No. and name: ___________________
Landmark: ___________________
Village / City: ______________
District:________________
State:______________
Pin code: __________
Part B – Additional Information
Phone No. / Mobile No. (optional):
Email (optional):  ____________________
Part C – Financial Information
I want to link my existing bank A/c to Aadhaar and I have no objection on this issue.
Bank name and Branch _____________
A/c No.______________
(Please use CAPITAL letters)
The Form can be downloaded from http://www.iaadhaar.com/forms/enrollment.pdf

ஆதார் எப்படி பதியப்படுகிறது

இந்த பதிவில் ஆதார் எப்படி பதிய்யபடுகிறது என்பதை புகைப்பட விளக்கங்களுடன் பார்ப்போம். 

1

2

ஆவணங்கள் பெறப்பட்டு சரிபார்க்கபடுகிறது .


3
ஆவணங்களில் உள்ள தகவல்கள் சேமிக்கபடுகிறது .

4
பதிவு செய்யப்பட்டுள்ளவைகள் சரியா என விண்ணப்பதாரர் சரி பார்க்கிறாரார்  

5


6

7

8

இறுதியில் அதிகாரி தனது கைரேகையை பதிவு செய்தவுடன் செயல்பாடு முடிகிறது .  


நன்றி http://uidai.gov.in/