Pages

Thursday, October 25, 2012

மனித நேயம்

நான் சாலையில் நடந்து செல்லும் போது கண்ட காட்சி.

ஒருவர் படுத்து கிடந்தார் அடையாளம் தெரியவில்லை பொதுவாக சாலையில் ஒரு ஆண் கிடக்கிறான் என்றாலே புல் தண்ணி என்று எண்ணிவிட்டு சென்றுவிடுவோம்!!  நானும் அதையே தான் செய்தேன் !!.

ஆனால் திரும்பும் வழியில் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது! அந்த மனிதனை ஒரு வயதான ஜோடி தண்ணீர் ஊற்றி எழுப்பி கொண்டிருந்தது. (விபத்து ஏற்பட்டு சாகக்கிடக்கும் ஒருவரை கண்டும் காணமல் போகும் சூழலில் தான் இருக்கிறோம் ) யாருமே கண்டுகொள்ளாமல் கிடந்த ஒருவரை அவர்கள் எழுப்ப காரனம் என்ன ?

பெற்ற மகனா ?, பாசமா ?, மனித நேயமா ? தெரியவில்லை.. ஆனால் அவர்கள் இருக்க போகும் கொஞ்ச நாளில் எந்த துன்பம் துயரத்திற்கு ஆளாகாமல் வாழவேண்டும் என்பதே என் ஆசை.



Wednesday, October 3, 2012

பசுமை விடியல் கலந்துரையாடல் – காஞ்சிபுரம் 30-09-2012

மிக எளிமையாக இயல்பாக நடந்த கலந்துரையாடல். இணையம் மூலமாக அறிமுகம் ஆன பசுமைவிடியல் அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் நேற்று முதன்முறையாக நேரில் சந்தித்தோம்.