Pages

Monday, June 25, 2012

எப்படி எல்லாம் மாட்டி விடறானுங்க!

இன்று கே ஆர் புரம் ரயில் நிலையத்திலிருந்து, எனது அலுவலகத்திற்கு சென்றேன் இரண்டு பேருந்து மாறி செல்லவேண்டும், 4 ரூபாய் தான் கட்டணம்  முதல் பேருந்தில் ஏறினேன் 5 ரூபாய் கொடுத்து அடுத்த நிறுத்தம் என்றேன் அவன் 2 ரூபாயை மீதம் கொடுத்து விட்டு சென்று விட்டான் !

4 ரூவா தான் டிக்கெட்டு ? ஒரு ரூபாய்க்கு பதிலா 2 கொடுதிட்டானே னு பார்த்தேன், சரி டிக்கெட் வாங்கும் போது திருப்பி கொடுத்து விடலாம் (அ) கொடுக்காமல் விடலாம் என்றிருந்தேன்.

கடைசி வரை கண்டக்டரை பிடிக்க இயலவில்லை, அடுத்தடுத்த நிறுத்தம் என்பதால் விரைவில் வந்து விட்டேன், போய் தொலை என்று முனகிக்கொண்டே இறங்கி போகும்போது ஒரு கை என்னை இறுக பிடித்து கொண்டது அய்யயோ 1 ரூபாய திருப்பி கேக்கபோரானோ என்று நிமிர்ந்து பார்த்தேன். டிகேட் செக்கர் !!!!!!



ஹ்ம்ம் செத்தண்டா என எண்ணினேன், என்னை எங்கும் நகர முடியாமல் பிடித்து கொண்ட டிக்கெட் செக்கர் டிக்கெட் எங்கே என்றார். நம்மகிட்ட தான் இல்லையே உள்ளே பார்த்தேன் அந்த கண்டக்டர் சண்டாள பய்யன் நம்மை கண்டுகொள்ளவே இல்லை, இரண்டொரு முறை கூப்பிட்டு பார்த்தேன் ஹ்ம்ம்  ஹூம் நோ ரெஸ்பான்ஸ்! கொஞ்ச நேரம் பர்சை துழாவினேன் ( இல்லன்னு தெரியும் என்ன செய்வது ).

அனைவரும் சென்று விட்டனர், நான் மட்டும் மாட்டிக்கொண்டேன்! இரண்டு மூன்று பேரிடம் பழைய டிக்கெட்டை கொடுத்திருக்கிறான் அந்த கண்டக்டர் !! அதையும் செக்கர் கண்டுபிடித்து விட்டார் !, என்னை பேருந்தின் உள்ளே இழுத்து சென்றார் உள்ளே இருந்த பயணிகள் என்னை ஒரு முறை நோட்டமிட்டு விட்டு வெளியே வழக்கம் போல் வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டனர்.

500 ரூவா தென்டமா என எண்ணிக்கொண்டே பர்சை எடுத்து பார்த்தேன் 300 சொச்சம் தான் இருந்தது, இப்பதான் பயங்கர கலவரமானேன். உள்ளே அழைத்து சென்ற செக்கர் இவருக்கு கொடுப்பா, என்ன பழைய டிக்கெட் லாம் கொடுத்திருக்க என்று பார்மல் ஆக கேட்டுவிட்டு சென்று விட்டார்!

நானும் அந்த ஆளு கிட்ட மறுபடி டிக்கெட் கொடுயா கீழ செக்கர் இருக்கார்ணு கேட்டேன் கண்டுக்கவே இல்லை! அவன் பாட்டுக்கும் பின்னாடி போயிட்டான்! பேருந்து நகர தொடங்கியது எட்டி வெளியே பார்த்தேன் செக்கர் வேறு பேருந்தில் வசூல் செய்து கொண்டிருந்தான் ஓடும் பேருந்தில் தான் இறங்க வேண்டிய நிலைமை !!.

வந்துச்சு பாருங்க கோபம், கொயால அடுத்த வண்டியில டிக்கெட் எடுக்க வே இல்லை.

Saturday, June 9, 2012

ஒண்ணுமே புரியல

                               மறந்து விடலாம் என்றென்னும் போதெல்லாம்
மனதை கனமாக்கும் என் நட்புகள் !
                                    
                                  ஐந்து வருடங்களாக என்னை பிடிக்கும் ஆனால்
என்னை பிடிக்காத என் காதலி!
                                 
                                  ஏன்டா சேர்ந்தோம் என்னத்த செய்தோம் என்று
யோசிக்க வைக்கின்ற என் கல்லூரி!
                              
                          இவன் எப்படி டா டிகிரி வாங்கினான்
 என யோசித்துகொண்டிருக்கும் என் ஆசிரியர்கள் !
                               
            அம்மா என் டாவு வேற யாரையோ கல்யாணம் பன்னிக்க போறாளாம் என்று சொன்னவுடன் , விட்ரா அவ கல்யானதுகுள்ள ரம்யாவ உனக்கு கட்டிவச்சிடலாம்  என்ற என் அம்மா !
                               
                                   அய்யயோ அப்படினா இனிமே நான் ரம்யாவ சைட்
அடிக்க மாட்டேன் என சேம் சைட் கோல் அடித்த என் தம்பி !
                                
                                       என் பய்யன் பெரிய ஆளா வருவான் என்று
இன்னும் என்னை நம்பி கொண்டிருக்கும் என் தந்தை !
ஒண்ணுமே புரியல !


சூர்ய  பிரகாஷ் .K.P