பணம் வந்தால் பத்தும் பறந்து
போகும்,
பணம் என்றால்
பொனமும் வாயை
பிளக்கும் .
போன்றவை ஒன்னாம் கிளாஸ்ல இருந்தே நமக்கு
சொல்ல பட்டவை, பெற்றோர்களால் போதிக்கபட்டவை என்று கூட சொல்லலாம்.
சோ அந்த பணத்தினை பற்றி கொஞ்சம் சொல்லலாம்
என நினைக்கிறேன்.
ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வருவோம் ,
தற்பொழுது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள்
‘பேங்க் நோட்டுகள்’ என்று அழைக்க படுகின்றன. காரணம்
என்னவென்றால் அது ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியாவால் அச்சிடப்பட்டு வெளியிடபடுவதால் .
‘ரிசெர்வ்
பேங்க் ஆப்’ இந்தியா 1935 ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கப்பட்டது. முதல்
முதலில் வெளியிடப்பட்ட பேங்க் நோட்டு 1938 ஜனவரியில்
வெளியிடப்பட்ட 5 ரூபாய் நோட்டே ஆகும் ,
பின்பு அதே ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஜுனில் முறையே 10,100,1000,10000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது .
ஆனால் அவையெல்லாம் ஆறாம் ஜியார்ஜ்-இன் உருவம் கொண்டவை. நாம் அப்பொழுது அடிமையாக தானே
இருந்தோம். மாதிரிக்கு சில படங்களை இணைத்துள்ளேன்.
1947 க்கு அப்பறம் அந்த நோட்டுகள்
நிறுத்தப்பட்டன , பின்பு 1949-1950 ல் புதிய
ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தபட்டன .
அவை அசோகா தூணிலுள்ள
சிங்கங்களை மையமாக கொண்டு உருவாக்க பட்டன. அதையும் நீங்கள் இங்கு காணலாம் .
அதே போன்று ஆயிரம் மற்றும் பத்தாயிரம்
ரூபாய் நோட்டுகளும் அச்சிடுவது நிறுத்தப்பட்டன .
தொடரும் ...................................
பின்குறிப்பு : * நான் இங்கு இந்திய ரூபாய் பற்றி மட்டுமே பதிவிட
போகிறேன்.
·
அதுவும் 1935-க்கு அப்பறம் மட்டுமே .
நன்றி http://www.rbi.org.in/home.aspx