Pages

Monday, December 19, 2011

ஜெ , சசிகலாவின் நட்பு


     1984 ல் கடலூர் மாவட்டத்தில் அரசு துறையில் செய்தி தொடர்பாளராக பணியாற்றி கொண்டு இருக்கிறார் நடராசன் ,

     அப்பொழுதைய கடலூர் மாவட்ட ஆட்சியாளராக சந்திரலேகா இருக்கிறார்,

     அவரிடம் தன்னுடைய மனைவி சசிகலா நடத்தும் வினோத் வீடியோஸ் நிறுவனத்திற்கு  அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதா பங்கேற்கும் கூடங்களில் வீடியோ எடுக்கும் பணியை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறார் நடராசன்,   

       அதன் படி  சந்திரலேகா சசிகலா & கோ வை அறிமுகம் செய்கிறார் ,
அவ்வாறு தொடங்கிய நட்பு
 
      மகாமகத்தில் ஒன்றாக நீராடியது,

      சசிகலாவின் உறவினர் பய்யன் ஒருவரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தது 

     வளர்ப்பு மகன் திருமணத்தில் ஜெ மற்றும் சசிகலா ஆடம்பர உடையில் ஜோடியாக ஊர்வலம் வந்ததது

      ஊழல் வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவை நேரில் சென்று வீட்டிற்கு அழைத்து சென்றது 

      இப்படி 25 ஆண்டுகளாக இணைபிரியா இந்த நட்பு இன்று குடும்பத்தோடு வெளியேற்றபட்டது !!!

      ஜெ , சசிகலாவின் இந்த பிரிவினைக்கு நிச்சயம் ஒரு மிக பெரிய காரணம் இருந்தாக வேண்டும் இல்லையெனில் ஏன் காசு வெட்டி போடும் அளவுக்கு வந்திருக்கிறது .

          சொத்து குவிப்பு பிரச்சனையா ?
           
          அதிகார பகிர்வு பிரச்சனையா ?

           அல்லது வேறு ஏதாவதா ?

காலம் தான் பதில் சொல்லும் .....................


Thursday, December 8, 2011

டிவிட்டரிடம் சரணடைந்த பேஸ் புக் நிறுவனர்



         சமீபத்திய ஹாட் டாபிக் என்றும் கூட சொல்லலாம். சிஈன் பார்கர் பேஸ் புக் நிறுவனர்களில் ஒருவரான இவர் சமீபத்தில் டிவிட்டர் குழுமத்துடன் நடந்த ஒரு சந்திப்பில் கலந்து கொண்டார் .

       அடுத்த சில நாட்களில் தனது தோற்றத்தை மாற்ற போவதாகவும் , மேலும் சில மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் டிவிட்டர் அறிவித்தது .

      மேலும் அவை பேஸ் புக்கையும் விஞ்சிய அளவிற்கு இருக்கும் என கூறபடுகிறது.



      இந்த சமையத்தில் தான் சிஈன் பார்கர் டிவிட்டரில் இணைந்தார் அடுத்த ஒரு சில மணி நேரங்களிலே லட்சம் பேர் பின் தொடரும் அளவுக்கு பிரபலமானார் .

     அவருடைய முதல் டிவிட் என்ன தெரியுமா ?

                        “சாரி சக்கர்” 

Thursday, December 1, 2011

ஆயிரம் ரூபாய் நோட்டில் தஞ்சை பெரிய கோயில்


         இந்திய நாட்டின் ரூபாயை பற்றி பார்த்து வருகிறோம். இது சென்ற பணம் பணம் money money money money பதிவின் தொடர்ச்சி .

        1953 ஆம் ஆண்டு முதல் ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி மொழி அச்சிடப்பட்டு வருகிறது.


        அதே போன்று 1954 ல் மீண்டும் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு அவை 1978 ல் மீண்டும் நிறுத்த பட்டன .



        தஞ்சை பெரிய கோயில், கேட் வே ஆப் இந்தியா ஆகியவற்றின் புகைப்படங்கள் அவற்றில் இடம் பெற்று இருந்தன.




         பின்பு 1960 களின் இறுதியில் நாட்டிற்காக பாடுபட்டவர்களை கவுரவிக்கும் விதமாக நோட்டுகளை அச்சிட தொடங்கினர் . 



       அதே சமயம் நோட்டுகளின் அளவையும் குறைத்தனர். சிக்கன நடவடிக்கையாம் .

       1980 ல் முற்றும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன .

       உதாரணமாக 2  ரூபாய் நோட்டில் ஆர்யபட்டா வை குறிக்கும் வகையிலும்,




       5 ரூபாய் நோட்டுகளில்  விவசாயத்தை குறிக்கும் வகையிலும் மற்ற ரூபாய் நோட்டுகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

தொடரும் .......     


நன்றி கூகிள் , http://www.rbi.org.in