Pages

Wednesday, December 26, 2012

ஆட்டோகிராப் சேரன் துணை : நான் வலைச்சரத்தில் எழுதியது


நாட்டியமாடும் அந்த கால்கள்
சட்டென்று என்னை தாக்கும் அவள் விழிகள்
ஒரு வேலை வேறு யாரயாவது பார்கிறாளோ ?
சில நேர புலனாய்வுக்கு பிறகு கன்பார்ம் செய்தேன்
என்னை தான் பார்க்கிறாள் !! (நம்ளையும் ஒரு பிகர் பாக்குதுபா)
தந்தையை அருகில் வைத்துக்கொண்டே !
ரயில் தாமதமாக சோர்ந்து போனவளாய் கண்களால் அவள் வருத்தத்தை தெரிவிக்க, நானும் அமர்ந்து கொண்டே அவளை கண்களால் தேற்றினேன்,
அவளும் நோக்க, சூர்யாவும் நோக்க அவளின் தந்தை முறைக்க ,
சட்டென்று விலகியவளாய், நான் எங்கே என்று தேட என் அருகில் அமர்ந்திருக்கிறாள் !!

ஒரு காதிலிருந்து மறு காது வரை நான் இளிக்க! மீண்டும் அவள் தந்தை முறைக்க! அப்பொழுது அவளின் மூச்சு காற்று படும் தூரத்தில் நான் இருக்கிறேன், திடீரென்று என்னை நேருக்கு நேர் பார்க்கிறாள் !!
அவள் கண்கள் என்னை ஊடுருவ ஊடுருவ சிலையாகிப்போன நான் அவள் எழுந்து சென்ற பிறகு தான் உணர்ந்தேன் என் கழுத்து ஐந்து பேர் சேர்ந்து அடித்தார் போல் வலிக்கிறதென்று !! (ஆமா ஏன் எழுந்து போனா ? காலைல குளிச்சிட்டு தானே வந்தேன் ? )

அன்று ரயில்வே ஸ்டேஷனில் தொலைத்த அவளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன் !!
பள்ளியில் புஷ்பா என்னை விரட்டிய போதும், கல்லூரியில் ஜானுவை நான் விரட்டியபோதும், இடையில் ஸ்டெபி, ரேகா, ப்ரியா, என லிஸ்ட் போனாலும் இவள் என்னை ஏதோ செய்து விட்டாள். ச்ச மறுபடியும் அவள பாக்கணும் டா சூர்யா.

ஏனென்றால் இவையெல்லாம் என் முதுமையின் தனிமைக்காக நான் சேர்த்துக்கொண்டிருக்கும் பொக்கிஷங்கள். அப்பொழுது எனக்குள் நானே சொல்லிகொள்வேன் அன்னைக்கு அவள் கிட்ட பேசி இருக்கலாம் டா ..

இப்பலாம் வெறும் லவ் பாட்டா கேக்க புடிக்குது,
புல் அடிச்சும் போதையில்லை, புல்லட் பீர் அடிச்சும் கிக்கில்லை,
கல்லு குடிச்சும் தூக்கமில்லை, கண்ண மூடுனா கனவுல நீதானே !!


1 comment: